என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நீலகிரி சாலை விபத்து
நீங்கள் தேடியது "நீலகிரி சாலை விபத்து"
நீலகிரி சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். #NilgiriBusAccident #MRVijayaBaskar
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மந்தாடா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது. சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது.
இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அதில் சிலர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
விபத்தில் லேசான காயம் அடைந்த 3 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், படுகாயம் அடைந்த 5 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், தண்டு வடம் பாதித்த பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினர். மொத்தம் 9 பேருக்கு ரூ.15.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். தமிழகத்தில் தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன என தெரிவித்தார். #NilgiriBusAccident #MRVijayaBaskar
நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #OotyAccident #NilgiriBusAccident
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மந்தாடா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. அபாயகரமான வளைவுகள் கொண்ட அந்த சாலையில் இருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது.
இதனால் இடிபாடுகளில் சிக்கிய பலர் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். சிலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், துடித்தனர்.
தகவலறிந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் முதல் கட்டமாக 7 பேர் உயிரிழந்தனர் எனவும், 27 பேர் காயமடைந்தனர் எனவும், அதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் பயணி ஒருவரும், பேருந்து நடத்துனரும் இன்று இறந்தனர். இதையடுத்து, நீலகிரி சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். #OotyAccident #NilgiriBusAccident #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X